பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங்,தமிழக ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெ>வித்துள்ளனர்.
தமிழர் திருநாள் பொங்கல் நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில்பைசாகி என்றும், மகர சங்கராந்தி என்றும் இப்பண்டிகை கொண்டாட்ப்படுகிறது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள பொங்கல் செய்தியில், அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக்கொண்டாடும் வேளையில், வேளாண் உற்பத்தியை அதிகரித்து, அமைதி, வளத்தைப் பெருக்கி நாட்டுக்கும்,தமிழகத்திற்கும் மேம்பாட்டை கொண்டு வர உறுதி பூணுவோம் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழரும், தமிழ் மொழியும் தரணியில் என்றும்தலை நிமிர்ந்து நின்றிட வேண்டும். தமிழகம் செழித்து சிறந்தோங்கிட இந்த நன்னாளில் பாடுபடுவோம் எனஉறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications