2 விபத்துகள்: பஸ்-பைக் மோதலில் 3 பேர் பலி
திருச்சி - காஞ்சிபுரம்:லால்குடி-டால்மியாபுரம் சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதியதில் 2 பேர் பலியாயினர். 4 பேர்படுகாயமடைந்தனர். அதே போல செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில்சப்-இன்ஸ்பெக்டரும் அவரது சகோதரரும் பலியாயினர்.
திருச்சியில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்த பாஸ்கர் (35) தனது நண்பர்களுடன் 3மோட்டார் சைக்கிள்களில் டால்மியாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவில் எதிர்திசையில் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில் பாஸ்கரும் செல்வன் (24) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாயாயினர். மேலும் 4 பேர்படுகாயமடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பைக் மீது பஸ் மோதி எஸ்.ஐ. பலி
அதே போல மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டரும் அவரது சகோதரரும்பலியாயினர். செங்கல்பட்டு, மதுரை வீரனன் கோவிலுக்கு அருகே இந்த விபத்து நடந்தது.
சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஐ. லோகநாதன் (50) தனது சகோதரருடன்சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது உத்திரமேரூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதுமோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலியாயினர். இதையடுத்து பஸ்சின் டிரைவர்தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications