இலவச அடுப்புகள்: ஸ்டாலின்-தயாநிதி வினியோகம்
சென்னை:தமிழக அரசின் இலவச சமையல் எரிவாயு அடுப்பு திட்டத்தின் கீழ் சென்னை நகரில் நடந்த பல்வேறுநிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் இலவசகேஸ் அடுப்புகளையும் சிலிண்டெருக்கான இணைப்புகளையும் வழங்கினர்.
போகி பண்டிகை முதல் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்பு திட்டம் அமலுக்கு வந்தது.சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தயாநிதி மாறன்,டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டு இலவசகேஸ் அடுப்புகளை வழங்கினர்.
தண்டையார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாலின் இலவச அடுப்புகளைவினியோகித்தார். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஷெனாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இலவசஅடுப்புகளை வழங்கினார்.
நிதியமைச்சர் அன்பழகன் பிரகாசம் சாலையிலும், பரிதி இளம்வழுதி எழும்பூரிலும் நடந்த நிகழ்ச்சிகளில் காஸ்அடுப்புகளை வழங்கினர்.
பெசன்ட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலுவும், சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தயாநிதிமாறனும் கலந்து கொண்டு அடுப்புகளை வழங்கினர்.












Click it and Unblock the Notifications