நான் ஒரு ரப்பர் மரம்!!: ஜெயலலிதா
சென்னை:நான் ரப்பர் மரம் மாதிரி, எனக்கு ரணங்கள் புதிதல்ல என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனவரி 17 என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாழ் தான்.தமிழகத்துக்கு அவர் பொற்கால ஆட்சியை தந்தார். பள்ளி சிறுவர்கள் பசியால் வாடக் கூடாது என்று சத்துணவுத்திட்டம் கொண்டு வந்தார்.
நான் எப்போதுமே சவால்களை எதிர்கொள்ள தயக்கம் காட்டியதே இல்லை. ஏனென்றால் ரப்பர் மரத்துக்குரணங்கள் புதிதல்ல.
எம்ஜிஆருக்கு நான் கொடுத்த சத்தியத்தை காக்கவும் இந்த இயக்கத்தை காக்கவும் உள உறுதியோடு நான்நடத்திய யுத்தம், சந்தித்த சவால்கள், பார்த்த போராட்ட களங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
பல்வேறு அவதூறுகள், துன்மதியாளர்களின் தூற்றுதல்கள், துரோகங்கள், வசவுகள், வக்கணைகள், வஞ்சனைகள்என பல முனை தாக்குதல்கள் வந்தன. புகை நாலு பக்க சுவரை தான் கரியாக்கும், ஆகயத்தை அல்ல. இதனால்அவர்களது தாக்குதல் முனை தான் மழுங்கிப் போனது.
வருங்காலம் கோழைக்கு அல்ல, தைரியசாலிகளுக்கே என்பதை துரோகிகள் புரிந்து கொண்டார்கள். புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசாக என்னை மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றியை எனக்கு பரிசாக தந்ததால் கழகத்தின்ஆட்சி இருமுறை தமிழகத்தில் என் தலைமையில் அமைந்தது.
கழகத்தின் வெற்றிப் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, தொடர்ந்து கொண்டேஇருக்கும்.
மக்களுக்கு தொண்டு செய்ய நாம் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் பலமிக்க எதிர்க் கட்சியாக நாமும்பலவீனமான, மைனாரிட்டி அரசாக திமுகவும் இருக்கும் நிலையை மக்கள் தந்துள்ளார்கள். இதிலிருந்து ஒருஉண்மை புலனாகும். அதாவது மக்கள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள்.
மக்களை திசை திருப்ப கருணாநிதி காட்டும் கண் கட்டு வித்தைகள் தான் இலவச திட்டங்கள். அந்ததிட்டங்களையும் சரியாக செயல்படுத்தாமல் ஏழை, எளிய மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சாயம் கொஞ்சம்கொஞ்சமாக வெளுத்துக் கொண்டுள்ளது.
அரைப்படி அரிசியிலே அன்னதானம், அதிலே கொஞ்சம் மேள தாளம் என்ற மோசடி நாடகம் தான் இப்போதுநடந்து வருகிறது.
தமிழகத்தை வழி நடத்தும் திறமை நமக்குத் தான் இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். நம் பக்கம் மக்கள்இருக்கும் வரை எதிரிகளால் ஒன்றும் செய்துவிட முடியாது.
கழக ஆட்சியை விரைவில் அமைக்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!!












Click it and Unblock the Notifications