காதலர்களை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:மாமல்லபுரம் அருகே காதல் ஜோடியை கத்தி முனையில் மிரட்டிய கும்பல் செல்போன்கள், பணத்தை திருடிக்கொண்டு தப்பியது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த ரலீன் (21) தனது காதலியான தன்மீனுடன் மாமல்லபுரம் அருகே கடற்கரைக்குச்சென்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது.
நகை, பணம், செல்போன்களைத் தருமாறு அக் கும்பல் கத்தி முனையில் மிரட்டியது. ஆனால், அதை தர மறுத்தரலீனை அந்தக் கும்பல் தாக்கி அருகே இருந்த மரத்தில் கட்டிப் போட்டது.
பின்னர் அந்தப் பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு செல்போன்களையும் அவரிடம் இருந்த பணம் ரூ.1,700யையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டது. இதையடுத்து இருவரும் மாமல்லபுரம் போலீசில் புகார்கொடுத்தனர்.
காயமடைந்த இருவரும் கேளம்பாக்கம் அருகே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications