ஆப்கன் எல்லையில் பாக் விமான படை தாக்குதல்
இஸ்லாமாபாத்:ஒசமா பின் லேடன் பாகிஸ்தானின் தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ள நிலையில்,ஆப்கான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படை பயங்கர தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வட மேற்கு எல்லைப் புற மாகாணமான வசீர்ஸ்தானில் இந்த தாக்குதல்நடந்து வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
![]() |
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த மாகாணம் சுயாட்சி கொண்ட பகுதியாகும். இங்கு பாகிஸ்தான் அரசின்சட்ட திட்டங்கள் எல்லாம் செல்லாது. அப் பகுதி பழங்குடியின சட்டங்களே அமலில் உள்ளன.
ஆப்கான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கும் இந்தப் பகுதியில் தான் பின் லேடன் பதுங்கியிருப்பதாககுற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
அதே நேரத்தில் அமெரிக்க உதவியோடு அவ்வப்போது இப் பகுதியில் விமானப் படை, ஏவுகணை, தரைப் படைதாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இந் நிலையில் பின் லேடன் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று கூறி அதிபர் முஷாரபை கடுப்படித்துள்ளார்புஷ். இதையடுத்து இன்று தெற்கு வசீர்ஸ்தான் பகுதியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டு வீசச்செய்தார் முஷாரப்.
இதில் ஆப்கான் தீவிரவாதிகள் உள்பட 30 பேர் பலியாகியுள்ளனர்.













Click it and Unblock the Notifications