1ம் வகுப்பு முதல் ஆங்கிலம்!!
டெல்லி:பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை கற்றுத் தர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம்,தேசிய அறிவு கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
ராஜிவ் காந்தி ஆட்சி காலத்தில் இந்தியாவில் தகவல் தொடர்பு புரட்சயை ஏற்படுத்தியவர் சாம் பிட்ரோடா.நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த பிட்ரோடா தலைமையில் தேசிய அறிவுசார் கமிஷனை மன்மோகன் சிங்அமைத்தார்.
![]() |
ஆய்வை முடித்து விட்ட பிட்ரோடா கமிஷன் மத்திய அரசிடம் தனது அறிக்கையை வழங்கியுள்ளது. அதில்கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் விவரம்:
நாடு முழுவதும் பள்ளிக் கூடங்கள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலத்தைக் கற்றுத் தர வேண்டும்.உயர் கல்விக்கு ஆங்கிலம் மிகவும் முக்கியமான மொழி என்ற அங்கீகாரத்தை அரசு உருவாக்கிட வேண்டும்.
பிளஸ்டூ முடித்த பின்னரும் கூட மாணவர்களால் ஆங்கிலத்தில் சரிவர பேச முடியாத நிலை உள்ளது. இதனால்உயர் கல்வியில் மாணவர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் இதை பிரதமர் எடுத்துக் கூறி, ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலத்தைபாடமாக்குவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களிடம் விளக்க வேண்டும்.
ஆங்கில போதனைக்காக தேசிய அளவில் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தால் 12 வருடங்களில் மாணவர்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத்தரும். அவர்களது எதிர்காலத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் மிகவும் உதவும்.
1ம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பிப்பதை கட்டயாமாக்கும் வகையில், சட்டத்தில் மாற்றங்களை மத்திய அரசுகொண்டு வர வேண்டும்.
ஆங்கிலம் கற்றுக் கொடுக்க நாடு முழுவதும் ஆசி>யர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் ஆசிரியர்களாகஇருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆங்கிலத்தில் சிறப்பாக பேச, எழுது, கற்றுத் தர, தங்களின் கருத்தைஅடுத்தவர்களுக்கு எளிதாக புரிய வைக்கக் கூடிய திறமை படைத்தவர்களை இப்பணியில் நியமிக்கலாம்.
இந்த ஆசியர்களைத் தேர்ந்தெடுக்க தேசிய அளவில் மையங்களை நிறுவ வேண்டும் என்று பிட்ரோடாபிரதமருக்கு அறிவுறுத்தியுள்ளார்.













Click it and Unblock the Notifications