பள்ளிகளில் மாணவர்களை அடிக்க அரசு தடை!
சென்னை:தமிழக பள்ளிகளில் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்க வகை செய்யும் கல்விவிதியின் 51வது பிரிவை நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொய் கூறுவது, ஆபாசமான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட தவறுகளைசெய்யும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை வழங்க கல்வி விதியின்51வது பி>வு அனுமதிக்கிறது.
ஆனால் தற்போது பள்ளிக் கூடங்களில் கடுமையான தண்டனைகள்வழங்கப்படுவதாக பெற்றோர்களும், பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும்ஏராளமான அளவில் புகார்கள் கொடுத்துள்ளன.
இந்த கடுமையான தண்டனைகள் காரணமாக உணர்ச்சிவசப்படும் மாணவர்கள்தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.
எனவே முத்துக்கிருஷ்ணன் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், 51வதுபிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் முலம் உடல் ரீதியான தண்டனைவழங்க வகை செய்யும் பிரிவை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் முலம் மாணவர்களை அடிப்பது, முட்டி போட வைப்பது உள்ளிட்டஉடல் ரீதியான தண்டனைகளை ஆசிரியர்கள் தர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications