திருப்பதி உண்டியலில் கள்ள நோட்டுக்கள்!
திருப்பதி:திருப்பதி கோவில் உண்டியலில் சமீப காலமாக கள்ள நோட்டுக்கள் ஏராளமான அளவில் போடப்பட்டுவருகின்றன.
இந்த கோவிலில் விஷேச நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 2 கோடி வரை உண்டியலில் போடப்படுவதுவழக்கம். ஆனால், சமீப காலமாக கள்ள நோட்டுக்களும் உண்டியலில் விழுந்து வருகின்றன.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ. 50 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் உண்டியலுக்குள் போடப்பட்டுள்ளன.இதால் தேவஸ்தான அதிகாரிகளும் ஆந்திர அரசும் அதிர்ச்சியடைந்துள்ளன.
ஆரம்பத்தில் 50, 100 என்று இருந்த கள்ள நோட்டுக்கள் எண்ணிக்கை இப்போது 10,000 வரைஅதிகரித்துவிட்டதாம். அதிலும் கடந்த சில வாரங்களில் வந்து விழுந்த கள்ள நோட்டுக்கள் மிக ஏராளம்.
இது குறித்து போலீஸ், ரிசவர் வங்கி மற்றும் அமலாக்கப் பிரிவினரிடம் தேவஸ்தானம் புகார் கொடுத்துள்ளது.
இதற்கிடையே சில பக்தர்கள் தங்களின் சொத்து பத்திரங்களையும் உண்டியலில் போட்டு வருகின்றனர்.இதையடுத்து பத்திரங்களை சரி பார்க்க தனிப் பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளது.
பல பக்தர்கள் லாட்டரி சீட்டுகளையும் உண்டியலில் போடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications