இ3வது முறையாக இரட்டைக் குழந்தைகள்!!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 3வது முறையாக இரட்டைக் குழந்தைகள்பிறந்துள்ளன. இது மிக அரிய மருத்துவ நிகழ்வாகும்.

Sarfunissa with female twins and her mother

திருச்சியைச் சேர்ந்த சர்பு நிஷா என்ற அந்தப் பெண்ணுக்கு 3வது முறையாகஅறுவைச் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரோகய்யாகூறுகையில், மருத்து வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வு. இப்படி நடப்பது மிக மிகஅரிதானது.

இதற்கு முன்பு 2000மாவது ஆண்டில் சர்பு நிஷாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்பிறந்தன. அடுத்து 2003வது ஆண்டில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. தற்போது இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

Sarfunissa with female twins and her mother

இது எப்படி நிகழ்ந்தது என்பதை நுணுக்கமாக கணிக்க முடியாது. காரணம் ஒவ்வொருபெண்ணுக்கும் அதற்கான காரணிகள் வேறுபடும். பாரம்பரிய ஜீன்கள் காரணாகவோஅல்லது மருந்துகள் காரணமாகவும் இது ஏற்படலாம்.

சர்பு நிஷாவின் 2வது பிரசவத்திற்குப் பிறகு அவரது கணவரை குடும்பக் கட்டுப்பாட்டுஅறுவைச் சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

சர்பு நிஷாவின் உடல் நலம் அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால்,அவரது கணவருக்கு அந்த அறுவைச் சிகிச்சையை செய்ய அறிவுறுத்தினோம்.ஆனால், அவர் அதைச் செய்யவில்லை என்றார்.

தனது மனைவி தொடர்ந்து 3வது முறையாக இரட்டைக் குழந்தைகள் பெற்றிருப்பதுகுறித்து கணவர் பீர் முகம்மது கூறுகையில், 6 குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதுசிரமமான ஒன்றுதான். இருந்தாலும் இதை கடவுளின் கொடையாக நினைக்கிறோம்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+