தேசிய கொடிக்கு அவமரியாதை-உமா மீது வழக்கு
போபால்:தேசியக் கொடியை அவமதித்ததாக பாரதிய ஜன சக்தி தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமானஉமா பாரதி மீது போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீப்சந்த் யாதவ் தாக்கல் செய்த மனுவில், நாடுமுழுவதும் வெளியாகும் ஒரு பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த ஒரு புகைப்படத்தை நான் பார்த்து அதிர்ந்தேன்.
![]() |
இது நடந்து இரண்டரை வருடங்களுக்கு முன்பு உமாபாரதி முதல்வர் பதவியிலிருந்து விலகியவுடன் திரங்காயாத்திரை என்ற பெயரில் ஒரு யாத்திரையை நடத்தினார். அந்த யாத்திரையின்போது ஒரு இடத்தில் தேசியக்கொடியை மிகவும் தவறாக கையில் பிடித்தபடி நின்றுள்ளார் உமா பாரதி.
இதன் மூலம் தேசியக் கொடியை அவர் அவமதித்து விட்டார். எனவே அவர் மீது கிரிமினல் சட்டத்தின் 190ஏபிரிவின் கீழும், தேசிய மரியாதைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் நெருக்கடி காரணமாகவே நான் உடனடியாக வழக்கு தொடர முடியாமல் போய் விட்டது என்றுகூறியுள்ளார் யாதவ்.
இந்த மனுவை விசா>த்த தலைமை நீதித்துறை நடுவர் ர வீந்திரா சிங் பிப்ரவ> 15ம் தேதி நே>ல் ஆஜராகி விளக்கம்அளிக்குமாறு உமாபாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications