நடுவீட்டில் ஆய் போன கொள்ளையன்!
சென்னை:திருட வந்த இடத்தில் ஒரு பொருளும் கிடைக்காததால் கடுப்பான திருடன், வீட்டின் நடுவே மலம் கழித்து தனதுகோபத்தை காட்டிவிட்டுப் போனான்.
சென்னை அருகே மூவரசம்பட்டு செந்தூரன் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் படாளத்தில் தோல்நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது அண்ணன் பரமேஸ்வரன் செளதியிலிருந்து சென்னைக்குவந்தார்.
ரவிச்சந்திரன் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். பின்னர் செளதி திரும்பிச் சென்றார். அதன் பின்னர் மாடி பகுதிக்குரவிச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் போகவில்லை.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு மாடிப் பக்கம் ரவிச்சந்திரன் போனார். அப்போது அறையின் கதவுஉடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோஉடைக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்த பொருட்கள் அறை முழுவதும் வீசி எறியப்பட்டிருந்தன. இதை விடக் கேவலமாக, அறையின் நடுவேமலம் இருந்தது. எந்தப் பொருளும் கிடைக்காத ஆத்திரத்தில் திருடன் மலம் கழித்து விட்டுச் சென்றிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.
இந்த நாறத் திருட்டு முயற்சி குறித்து மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications