மிரண்டு ஓடிய பார்வதி-அரண்டு ஓடிய பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் யானை பார்வதி மிரட்சி அடைந்து ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்துஓட்டம் பிடித்தனர்.
மாட்டுப் பொங்கலையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு பக்தர்கள் கரும்பு கொடுக்கும்நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கரும்பு, வெல்லம் உள்ளிட்டவற்றைக்கொடுத்தனர்.
அப்போது திடீரென யானை பார்வதி அங்கிருந்து ஓட்டம் எடுத்தது. மிரட்சி அடைந்து அங்கும் இங்கும் அதுஓடியதால், பக்தர்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் பார்வதி கட்டுக்குள் வந்தது. அதிக அளவிலான மனிதக்கூட்டத்தைப் பார்த்ததால் பார்வதி மிரண்டு விட்டதாக பாகன் லட்சுமணன் தெரிவித்தார்.
பின்னர் பக்தர்கள் பீதி அடங்கி கோவிலுக்குள் நடையைக் கட்டினர்.












Click it and Unblock the Notifications