சபரிமலை-கேரளாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி:சபரிமலை அய்யப்பனின் ஆபரணங்களை மாற்றி புதிய நகைகள் செய்யவும், ராஜகுடும்பத்தினருக்கு பாத பூஜை செய்யும் பழக்கத்தை கை விடவும் கோவில்தேவஸ்தானத்திற்கு கேரள அரசு கொடுத்த அனுமதியை எதிர்த்து திருவாங்கூர் ராஜகுடும்பம் தொடுத்திருந்த வழக்கில் தேவஸ்தானத்திற்கும், கேரள அரசுக்கும் நோட்டீஸ்அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அய்யப்பன் கோவில் ஆபரணங்களை மாற்றி விட்டு புதிய நகைகள் செய்ய சமீபத்தில்திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு கேரள அரசு அனுமதி கொடுத்திருந்தது. மேலும்கோவில் சடங்குகளில் மாற்றம் கொண்டு வரவும் அனுமதி அளித்திருந்தது.
மேலும், பந்தளம் மன்னரின் கால்களைக் கழுவி பாத பூஜை செய்யும் வழக்கத்தைக்கைவிடவும் கோவில் தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கும் கேரள அரசு அனுமதிஅளித்திருந்தது.
இதை எதிர்த்து பந்தளம் ராஜாவும், அரண்மனை நிர்வாக குழுவும் உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.சீமா,ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறுகூறி கேரள அரசு, திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications