செளதி: கொலையாளியின் தலை துண்டிப்பு
ரியாத்:செளதி அரேபியாவில் ஒருவரை சுட்டுக் கொன்ற குடிமகனுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
செளதியின் கிழக்கில் உள்ள தமாம் நகரைச் சேர்ந்தவர் அப்துல்லா பின் அகமது அல் சஹ்ரானி. இவர் சாத் அல் சாதி என்ற நபரைசுட்டுக் கொன்றார்.
இதையடுத்து சஹ்ரானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. செளதி சட்டப்படி மரண தண்டனையை பொதுமக்கள்முன்னிலையில் தலையைத் துண்டித்து நிறைவேற்றுவார்கள். அதன்படி சஹ்ரானிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் ஆகியவை செளதி சட்டப்படி மரண தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும்.கடந்த 2004ம் ஆண்டு 86 பேருக்கும், 2005ல் 36 பேருக்கும், கடந்த ஆண்டு 34 பேருக்கும் செளதியில் மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 2வது நபர் சஹ்ரானி ஆவார். செளதியில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் நிலவி வருகின்றன. இருப்பினும் தனது சட்டத்தை செளதிஅரசு தளர்த்தாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications