யுஎஸ்-இறக்கி விட்டதால் 4 லட்சம் $
பாஸ்டன்:பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறார் என்று கூறி அமெரிக்க விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டவருக்கு 4லட்சம் டாலர்கள் நிவாரணத் தொகையாக வழங்க விமான நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர் ஜான் செர்குய்ரா. இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். கடந்த 2003ம்ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இவர் பாஸ்டனிலிருந்து புளோரிடாவின் போர்ட் லாடரேல் நகருக்குச் செல்லஅமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக வந்தார்.
ஆனால் இவரும், மேலும் இரண்டு இஸ்ரேலியர்களையும் தீவிரவாதிகளாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தில்விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். இரு இஸ்ரேலியர்களும் ஆங்கில மொழியில் இல்லாமல் வேறு மொழியில்மிக சத்தமாக பேசியபடி இருந்ததால் அவர்கள் மீது விமான ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் கீழே இறக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார்விசாரணை நடத்தினர். அதில், 3 பேரும் தீவிரவாதிகள் இல்லை என்று தெரிய வந்தது. இருப்பினும் அந்த விமானநிறுவனத்தினர் தங்களது விமானத்தில் ஜான் உள்ளிட்ட 3 பேரையும் தொடர்ந்து பயணம் செய்யஅனுமதிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான் செர்குய்ரா மாசசூசட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது சிவில்உரிமைகளை விமான நிறுவனம் பறித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜானுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. ஜான் விமானத்தை விட்டு கீழேஇறக்கப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக 4லட்சம் டாலர்களை இழப்பீடாக விமான நிறுவனம் தர உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் மேற்கு ஆசிரியர்கள் மீதான இன துவேஷம்அமெ>க்காவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் முஸ்லீம் இமாம்கள் மாநாட்டுக்குச்செல்ல வந்த 6 இமாம்களை மின்னசோட்டா விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கீழேஇறக்கி விட்டது நினைவிருக்கலாம்.
அவர்கள் ஆறு பேரும் விமானத்திற்குள்ளேயே தொழுகை நடத்த முயன்றபோது, அவர்கள் தீவிரவாதிகளாகஇருக்கக் கூடும் என்ற அச்சத்தில் கீழே இறக்கி விட்டனர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள்.












Click it and Unblock the Notifications