3 இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் மையங்கள்:நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே 3 இடங்களில் கடல் நீரைக் குடிநீராக்கும் மையங்களை அமைக்கவும், ஒரு நாளைக்கு 100மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நெமிலி, திருவிடந்தை, மீஞ்சூர் ஆகிய இடங்களில் இந்த மையங்கள்அமையவுள்ளன.

சென்னை மாநகரம் மகா நகமராக பல்கிப் பெருகி விரிவடைந்து வருகிறது. இட நெருக்கடியை விட குடிநீர்பற்றாக்குறைதான் பெரும் சவாலாக உள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் சென்னை நகர மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படும் நிலை உருவாகும் எனஅஞ்சப்படுகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை போக்க பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில்உள்ளன.

சென்னையைச் சுற்றிலும் உள்ள ஏரிகளில் முன்பு போல அதிக அளவில் நீர் சேருவதில்லை. இதனால் இதற்குமாற்றாக கடந்த அதிமுக ஆட்சியியல் புதிய வீராணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தால் நகரின்குடிநீர்த் தேவை பெருமளவில் குறைந்தது.

ஆனால் வீராணம் ஏரியில் தண்ணீர் இருந்ததால் பிரச்சினை தீர்ந்தது. அந்த ஏரிக்குத் தண்ணீர் தரும் காவிரியும்வறண்டால் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவது திண்டாட்டமாகி விடும்.

இதை கருத்தில் கொண்டுதான் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு மத்தியஅரசு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.

இத்திட்டத்தை சென்னை குடிநீர் வினியோகத்தை மேற்கொண்டுள்ள மெட்ரோ வாட்டர் நிறுவனம்மேற்கொள்ளவுள்ளது. தினமும் 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்தமாக்கி குடிநீராக்கி அதை சென்னைமக்களுக்கு வழங்க மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அதிமுக ஆட்சியில் உலக அளவிலான டெண்டர்விடப்பட்டது. ஆனால் அதில் கமிஷன் அடிக்க முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. அந்த முறைகேடு புகார்காரணமாக அந்த டெண்டர் கைவிடப்பட்டு விட்டது.

இந் நிலையில் இப்போது புதிதாக டெண்டர் விடப்படவுள்ளது. இந்த டெண்டரில் சில விதிகளும்தளர்த்தப்பட்டுள்ளன. 20 எம்.எல்.டி. கடல் நீரை குடிநீராக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை மாற்றி 10எம்.எல்.டி.யாக உற்பத்தி அளவைக் குறைத்துள்ளனர்.

சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நெமிலி மற்றும் திருவிடந்தையில் கடல் நீரைக்குடிநீராக்கும் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மீஞ்சூரிலும் ஒரு மையம் அமையவுள்ளது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை நகரின் குடிநீர்த் தட்டுப்பாடு பெருமளவு குறைந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+