இந்திர குமாரிக்கு ஆப்பு வைத்த ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக மகளிர் ஆணையத் தலைவராக கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கு.ம.ராமாத்தாள்நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவராக சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரும் சமீபத்தில் திமுகவில்இணைந்தவருமான இந்திரகுமாரியை முதல்வர் கருணாநிதி நியமித்தார். இதற்கு பாமக தரப்பிலிருந்து கடும்எதிர்ப்பு கிளம்பியது. அதிமுக ஆட்சியில் இலவச சேலை ஊழல், செருப்பு ஊழலில் அடிபட்ட இந்திர குமாரிக்குஇந்தப் பதவியா என்று கேட்டு கருணாநிதிக்கு காட்டமான கடிதத்தை அனுப்பினார் ராமதாஸ்.

அவரை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்திருந்தார். இதையடுத்து இந்திரகுமாரியின்நியமனத்தை அவசரமாக ரத்து செய்தார் கருணாநிதி.

இந் நிலையில் மகளிர் ஆணையத் தலைவராக கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினருமான கு.ம.ராமாத்தாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் காயத்ரி தேவி, கமலாம்பாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி குத்சியா காந்தி, ஐ.பி. எஸ். அதிகாரி வனிதா, ராணி மேரிக் கல்லூரி முதல்வர் குயின்பின்டோ, வழக்கறிஞர் சங்கமித்ரா ஆகியோரும் பிற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலுவல் சார்ந்த உறுப்பினராக சமூக நலத்துறை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சமூக நலத்துறைஇயக்குனரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+