கால்வாயில் மிதந்த அக்காள்-தம்பி பிணங்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கால்வாயில் மிதந்து வந்த 19 வயது பெண் மற்றும் அவரது தம்பியின் அழுங்கிய பிணங்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள கருப்பராயன் கோவில் பாலம் அருகே உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட கால்வாயில் இரு அழுகிய பிணங்கள் மிதந்து வந்தன.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த இரு பிணங்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தெரிய வந்த விவரம்:

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெண் கலைமணி (வயது 40). இவரது மகள் அர்ச்சனா (19), மகன் வினோத் (11).

கலைமணியின் கணவர் தினமும் குடித்து விட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவாராம். இதனால் கலைமணிக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம்.

கணவரின் போக்கால் விரக்தியுற்ற கலைமணி தனது இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக கலைமணியின் கணவர் போலீஸார் புகார் கொடுத்திருந்தார்.

இந் நிலையில்தான் கால்வாயில் மிதந்து வந்த இரு பிணங்களை போலீஸார் கைப்பற்றினர். அவை அர்ச்சனா, வினோத் என்பது தெரிய வந்துள்ளது. இருவரது கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன.

எனவே இவர்களின் கைகளை கட்டி அவர்களை கால்வாயில் கலைமணி தள்ளி விட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கலைமணியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+