கிரிக்கெட்-சென்னையில் டிக்கெட் விற்பனை விறுவிறு
சென்னை:இந்தியாவுக்கும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் சென்னையில் நடைபெறவுள்ள 3வது ஒரு நாள் கிரிக்கெட்பாட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியா வருகிறது. இந்தியாவுடன் நான்கு ஒரு நாள் போட்டிகளில் அந்த அணிவிளையாடுகிறது. முதல் போட்டி கான்பூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது. 24ம் தேதி கட்டாக்கில் 2வது ஒரு நாள்போட்டியும், 27ம் தேதி சென்னையில் 3வது போட்டியும், வதோதராவில் 31ம் தேதி நான்காவது மற்றும் இறுதிபோட்டியும் நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை சேப்பாக்கம் கிரிக்கெட்மைதானத்தில் தொடங்கியது. குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ. 400 எனவும், அதிகபட்சம் ரூ. 10,000வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்குவதற்காக அதிகாலை 3 மணியிலிருந்தே ரசிகர்கள் வ>சையில் நிற்க ஆரம்பித்து விட்டனர்.டிக்கெட் விற்பனை படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 40,000 டிக்கெட்டுகள் விற்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications