மீண்டும் திமுக கூட்டணியே வெல்லும்: காங்கிரஸ்
சென்னை:99 வார்டுகளுக்கு நடக்கும் மறு தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் இன்று கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் அவர்களிடமிருந்து ராஜினாமாக் கடிதங்கள் பெறப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பெரும் வாக்குவாதமே நடந்ததாக கூறப்படுகிறது. கஷ்டப்பட்டு அத்தனைகவுன்சிலர்களிடமிருந்தும் ராஜினாமாக் கடிதம் பெறப்பட்டதாம்.
அதன் பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூட்டணித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முதல்வர் கருணாநிதி தனது முடிவை வெளியிட்டார்.இதுகுறித்து இன்று கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கட்சிமேலிடத்தின் உத்தரவைப் பெற்று, கவுன்சிலர்களிடமிருந்து ராஜினாமாக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளன.
முதல்வரின் முடிவு வரவேற்புக்குரியது. இதனால் தேர்தலில் வன்முறை நடந்தது என்று ஒப்புக் கொள்வதாகஆகாது. மாநகராட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்று மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது.
மறு தேர்தலிலும் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications