உடல் நலம் தேறி வீடு திரும்பினார் மம்தா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட திரிணமீல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 20 நாள் மருத்துவமனை வாசம் முடிந்து, உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

Mamtha

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் மம்தா.

அவரது உடல் நலம் மிகவும் மோசமான நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோ>ன் வேண்டுகோளை ஏற்று கிட்டத்தட்ட 1 மாதத்துக்குப் பின் டிசம்பர் 29ம் தேதி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார் மம்தா. அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கடந்த 20 நாட்களாக மம்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை மம்தா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டுடுக்குக் கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் மம்தா பேசினார்.

அப்போது, இன்னும் 2 மாதங்களுக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போதுதான் முழுமையாக குணமடைய முடியும் என்றும் கூறியுள்ளனர்.

எனது சிறுநீரகமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க நான் விரும்பவில்லை என்றார்.

மம்தாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவரான டாக்டர் சுதர்சன் கோஷ் தஸ்திதார் கூறுகையில், மம்தாவின் கல்லீரலில் கற்கள் உருவாகியுள்ளன. அறுவைச் சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும். ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. சிறிது காலம் கழித்து செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+