குடும்ப சண்டை-கப்பலிலிருந்து குதித்து தற்கொலை
சென்னை:கப்பலில் பயணித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கணவர் நடுக் கடலில் கப்பலிலிருந்துகுதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பீமய்யா. அந்தமானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். மனைவி, மகள், மகனுடன் கப்பல் மூலம் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
கப்பல் நடுக் கடலில் வந்து கொண்டிருந்தபோது 7வது மாடியில் பயணித்துக் கொண்டிருந்த பீமய்யாவுக்கும்,அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பீமய்யா திடீரென கப்பலிலிருந்துகடலில் குதித்தார். அப்போது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தது.
பீமய்யா கடலில் குதித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாலுமிகள் உடனடியாக அவரைத் தேடும் பணியில்இறங்கினர். 3 மணி நேரம் தேடியும் பீமய்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நிச்சயம் உயிருடன்இருக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை துறைமுகத்துக்கு கப்பல் வந்தவுடன் துறைமுக போலீஸில் கப்பல் அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.பீமய்யாவின் உடலைத் தேடும் பணியில், கடலோரக் காவல் படையும், கடற்படையும் இறங்கியுள்ளன.
அந்தமானில் இருந்து கணவருடன் கிளம்பிய மனைவி அழுதபடியே குழந்தைகளுடன் ஆந்திராவுக்கு கிளம்பிச்சென்றார்.












Click it and Unblock the Notifications