மாநகராட்சியை கலைக்க வேண்டும்-வைகோ
சென்னை:சென்னை மாநகராட்சியை கலைத்துவிட்டு எல்லா வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையும் அராஜகமும் வாக்குச் சாவடிகளைகைப்பற்றிய அக்கிரமும் நடந்தது. ஜனநாயகம் படுகொலையானது.
அதற்கு முக்கிய காரணம், சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதும்,மாநகராட்சியையும் அதிமுகவே கைப்பற்றும் என்ற திமுகவின் அச்சம் தான். அந்த பயத்தில் தான் வன்முறைவெறியாட்டத்தை நடத்தினார்கள்.
ஆனால், தேர்தல் முறையாக நடந்ததாக மாநில தேர்தல் ஆணையரும் டிஜிபியும் மாநகர போலீஸ் கமிஷ்னரும்சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இது தொடர்பான வழக்கில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, 99 வார்டுகளுக்கு நடந்த தேர்தல் செல்லாது என தனதுதீர்ப்பில் இடித்துரைத்தார். 3வது நீதிபதி விசாரணையிலும் மேல் முறையீடு செய்தால் உச்ச நீதிமன்றத்தில்கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து தான் 99 கவுன்சிலர்களும் பதவி விலகுவதாக அறிவித்து நாடகம்போடுகிறார்கள்.
மொத்தமுள் 155 வார்டுகளிலும் தான் அராஜகமும் மோசடியும் நடந்தது. எனவே சென்னை மாநகராட்சி மன்றம்கலைக்கப்பட வேண்டும். எல்லா வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications