பயணிகள் மீது பஸ் பாய்ந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தலைவாசல்:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது பஸ்மோதியதில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தலைவாசல் அருகே உள்ள நந்தக்கரை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், அவரது மகன்கருப்பண்ணன், மருமகள் சங்கீதா, சம்பந்தி மணி, உறவினர்கள் விஜயா, சுதாகர்,பாப்பா ஆகியோர் சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது ஆத்தூர் செல்லும் தனியார் பேருந்து, தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்தை ஓவர் டேக் செய்ய முயன்றது. இதில் நிலை தடுமாறி,சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த மணி குடும்பத்தினர் மீது மோதியது.
இதில், பெருமாள், கருப்பண்ணன், பாப்பா, சுதாகர், விஜயா ஆகிய 5 பேரும் சம்பவஇடத்திலேயே பலியாயினர். மணி மட்டும் அதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினார்.












Click it and Unblock the Notifications