ரத்த தானத்தில் தமிழகம் 2ம் இடம்!
சென்னை:இந்தியாவிலேயே ரத்த தானம் செய்வதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர்கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் ரத்த மாற்றுத்துறை சார்பில் பாதுகாப்பான ரத்தம பெறுவது குறித்த முகாமைதொடங்கி வைத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் பேசுகையில்,
இந்தியாவிலேயே ரத்த தானம் செய்வதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அரசு மருத்துவமனையின்ரத்த வங்கியில் இருந்து அதே மருத்துவமனையில் நடக்கும் ஆபரேசன்களுக்கு மட்டுமே ரத்தம் தரப்படுகிறது.வெளியில் ரத்தம் தேவைப்பட்டால் தருவதில்லை. இதை மாற்ற வேண்டும். வெளியிலும் ரத்தம்தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனையில் இருந்து ரத்தம் தரப்பட வேண்டும் என்றார்.
சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் பேசுகையில், அரசு மருத்துவமனைகளில் 84 சதவீத ரத்தம் தானமாகவும்,தனியார் மருத்துவமனைகளில் 65 சதவீத ரத்தம் தானமாகவும் பெறப்படுகிறது என்றார்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குனர் சுப்ரியா சாகு பேசுகையில், நம் நாட்டில் 7 சதவீதம்பேருக்கு ரத்தம் மூலமாக எய்ஸ்ட் பரவுகிறது. இதைத் தடுக்க பாதுகாப்பான ரத்தம் தேவை என்றார்.












Click it and Unblock the Notifications