ஆந்திராவில் படகு ஆற்றில் கவிழ்ந்து 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்டோர்பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகபூப் நகர் மாவட்டம் சிங்கோட்டம் என்ற இடத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கர்னூல் மாவட்டம்முரவகொண்டா கிராமத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணா நதியில் படகில் சென்றனர்.
படகு பாரம் தாங்க முடியாமல் நடு ஆற்றில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். 50க்கும்மேற்பட்டோர் இதில் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள்உடல்களைத் தேடும் பணி நடக்கிறது.












Click it and Unblock the Notifications