98 வார்டுகளுக்கும் ஏப்ரலில் மறு தேர்தல்!
சென்னை:திமுக கூட்டணிக் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ள 98 வார்டுகளுக்கும் ஏப்ரல்மாதம் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன்கூறியுள்ளார்.
![]() |
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பின்அடிப்படையில், திமக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் நேற்று ராஜினாமாசெய்து விட்டனர். மேயர் உள்ளிட்ட அனைத்துக் கவுன்சிலர்களின் ராஜினாமாகடிதங்களும் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் ஒப்படைக்கப்பட்டது.
99 பேரில் ஒருவரான பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் ராஜ் மட்டும்ராஜினாமா செய்யவில்லை.
இந் நிலையில் 98 வார்டுகளுக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்துமாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ஏற்கனவே 2கவுன்சிலர்கள் (அதிமகவைச் சேர்ந்தவர்கள்) ராஜினாமா செய்ததால் அந்தகாலியிடங்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் 98 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.எனவே ஏற்கனவே காலியான இரண்டு வார்டுகளுக்கும், இப்போது காலியாகியுள்ளவார்டுகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய 2 மாதங்கள் தேவைப்படும். இதனால்ஏப்ரலில் தேர்தல் நடக்கலாம். தேர்தல் தொடர்பாக மாநகராட்சி ஆணையர்,காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தப்படும்.
பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றார் சந்திரசேகரன்.













Click it and Unblock the Notifications