ஆள் இல்லாததால் மாநகராட்சி கூட்டம் ரத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை:மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்ட போதிய உறுப்பினர்கள் வராததால், சென்னை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று ரத்துசெய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவின் தீர்ப்பைத் தொடர்ந்தி திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்கள்நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அனைவரின் ராஜினாமா கடிதங்களையும் மேயர் மா.சுப்பிரமணியன்மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் ஒப்படைத்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாமன்றச் செயலாளர் ரீட்டாவிடம் கொடுத்தார். மேயரின் கடிதத்தை இன்று மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு மாமன்றம் கூடுவதாக இருந்தது. இதுதொடர்பாக கவுன்சிலர்களுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மறு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 155கவுன்சிலர்களில் ஏற்கனவே 2 பேர் ராஜினாமா செய்து விட்டனர். நேற்று 98 பேர் ராஜினாமா செய்தனர். மீதம் 55 பேர்தான்உள்ளனர்.

மாமன்றக் கூட்டத்தைக் கூட்ட குறைந்தது 51 கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. ஆனால் அவசர அவசரமாக கூட்டம்கூட்டப்பட்டதால், அவர்களால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

எனவேதான் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பபட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+