72 வயது முதியவருக்கு விவாகரத்து!!
சென்னை:மனைவி கொடுமை தாங்க முடியாமல் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்த 72வயது முதியவருக்கு விவாகரத்து வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு இப்போது 72 வயதாகிறது.1961ம் ஆண்டு இவருக்கும், சாந்தா என்பவருக்கும் கல்யாணம் நடந்தது.
இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இதையடுத்து ஒரு குழந்தையைத்தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சாந்தா கடந்த 1991ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இதனால் தவித்துப் போன விஸ்வநாதன், தத்துக் குழந்தை மற்றும் தனது வயதானதாயாரைக் கவனிக்க முடியாமல் திண்டாடினார். இதையடுத்து இருமுறை விவகாரத்துஆன லட்சுமி என்ற பெண்ணை 1992ம் ஆண்டு மறுமணம் புரிந்தார்.
3 ஆண்டுகள்தான் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். அதன் பின்னர் லட்சுமி,விஸ்வநாதனையும், அவரது தாயாரையும், குழந்தைதையும் கொடுமைப்படுத்தஆரமபித்து விட்டார் எனத் தெரிகிறது.
இதனால் மனம் வெறுத்த விஸ்வநாதன் தனது தாயார், குழந்தையுடன் தனியாக வந்துவிட்டார். கடந்த 10 வருடமாக லட்சுமியைப் பிரிந்து வாழும் விஸ்வநாதன்,விவகாரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ஆனால் குடும்ப நீதிமன்றம் விவகாரத்து வழங்க மறுத்து விட்டது. இதையடுத்துஉயர்நீதிமன்றத்தை நாடினார் விஸ்வநாதன்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பாலசுப்ரமணியன், தனபாலன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், தத்துப் பிள்ளைக்கு சொத்தை எழுதியதால்தான் விஸ்வநாதன் மீதுஆத்திரமடைந்து லட்சுமி கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகிறது.
இந்து திருமணச் சட்டத்தின் 76வது திருத்தத்தின்படி கொடுமைப்படுத்தும்மனைவியிடமிருந்து விவகாரத்து பெற கணவருக்கு உரிமை உண்டு. சொத்துஆசையுடன் உள்ள லட்சுமியை விட்டு 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கிறார்விஸ்வநாதன்.
எனவே அவருக்கு விவகாரத்து வழங்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications