நல்லதொரு சமுதாயம்.. அரவாணிகள் பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:கண்தானம் மற்றும் ஆரோக்கிய சமுதாயத்தை வலியுறுத்தி அரவாணிகள் ஒருவார கால பிரசார இயக்கத்தைசென்னையில் இன்று தொடங்கினர்.

இன்று அரவாணிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தஅரவாணிகள் சென்னையில் கூடி இந்த பிரசார இயக்கத்தைத் தொடங்கினர்.


அடையாரில் உள்ள தன்னார்வ சுகாதாரப் பணிகள் மருத்துவமனையில் (வி.எச்.எஸ்) நடந்த நிகழ்ச்சியில்,தமிழகம் முழுவதும் கண்தானம் மற்றும் ஆரோக்கிய சமுதாயம் ஆகியவற்றை வலியுறுத்தி ஒரு வார கால பிரசாரஇயக்கத்தை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இந்தப் பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது. நல்லதொரு சமுதாயத்திற்குநாங்களும் என்ற வாசகத்துடன் இந்த பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது.

சமுதாயத்தின் பிற பிரிவினரோடு அரவாணிகளும் இணைந்து வாழ்வதை உறுதி செய்யும் விதமாக இந்த பிரசாரம்அமையும்.


பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைத்து வி.எச்.எஸ். செயலாளர் டாக்டர் என்.எஸ்.முரளி பேசுகையில்,சமுதாயத்தினரின் மற்ற பிரிவினரோடு இணைந்து வாழும் உரிமை அரவாணிகளுக்கும் உண்டு. அதற்கானவிழிப்புணர்வுப் பிரச்சாரமாக இந்த இயக்கம் அமையும்.

எங்களாலும் ஆக்கப்பூர்வமாக, சேவை மணப்பான்மையோடு செயல்பட முடியும் என்பதை அரவாணிகள்வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

சமூக சேவகர் பாரதி கண்ணம்மா பேசுகையில், சமுதாயத்திற்காக சேவை செய்ய அரவாணிகள் முன்வரவேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ பழக வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில்அரவாணிகளுக்கிடையே தன்னம்பிக்கையை உருவாக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் பலன் தந்துள்ளன.

மற்றவர்களை நம்பியிராமல் வாழ அவர்கள் பழகத் தொடங்கியுள்ளனர். ஒரு சமுதாயமாக அவர்கள் உருவாகிவருகின்றனர் என்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கண் தானத்தை வலியுறுத்தும் தாயின் கண்மணிகள் என்ற குறும்படமும்வெளியிடப்பட்டது. மேலும் நல்லதோர் சமுதாயத்திற்கு நாங்களும் என்ற தலைப்பில் அரவாணிகள் நடத்தியநாடகமும் நடத்தப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டுக்குச் சென்ற அரவாணிகள், அங்குள்ள குழந்தைகளுடன்கலந்துரையாடினர். அவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக குழந்தைகளிடம் கூறிஆறுதல் தெ>வித்தனர்.

இந்த ஒரு வார கால பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக 20,000 மரக் கன்றுகளையும் அரவாணிகள்நடவுள்ளனர். இதுதவிர மாவட்டந்தோறும் உள்ள மருத்துவமனைகளில் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கும்அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஜனவ> 24ம் தேதி சென்னையில் பிரசார இயக்கம் நிறைவடைகிறது. அப்போது சமூக நலத்துறை அமைச்சர்டாக்டர் பூங்கோதையை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க அரவாணிகள்திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+