அனைத்து பள்ளிக்களுக்கும் இன்டர்நெட்-தயாநிதி
டெல்லி:நாட்டின் அனைத்து மேல்நிலை பள்ளிகள் மற்றும், பொது சுகாதார மையங்கள், கிராம பஞ்சாயத்துகளுக்கு விரைவில்இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படவு"ளது என மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.
டெல்லியில் நடந்த இந்தியா டிஜிட்டல் மாநாட்டில் அவர் பேசுகையில்,
நாடு முழுவதும் அதிக அளவில் இன்டர்நெட் பரவ வேண்டும் என அரசு வரும்புகிறது. கண்ணாடி இழை கேபிள் மற்றும் கேபிள்தேவைப்படாத தொழில்நுட்பம் மூலம் இந்தியா முழுவதும் இணைக்கப்பட்டு 22 மொழிகளில் தொடர்பு புகொள்ளும் நிலைவரவேண்டும். இதுவே தான் என் கனவு.
தற்போது உலக அளவில் இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இன்டர்நெட்பயபடுத்துவோர் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருதிறது.
இணையதள முகவரிகளில் டாட் காம் என முடிபவைதான் அதிகமாக உள்ளன. இந்தியாவில் சர்வரை கொண்டு இயங்கும் டாட்இன் டொமைன்கள் அதிகமாக வேண்டும். உலக அளவில் இணைய தளங்களை உருவாக்கும் சேவையில் முதல் 10இடங்களுக்குள் இந்திய இணையத் தளங்கள் இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன்.
நடப்பாண்டு பிராட் பேண்ட் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இன்டர்நெட் மிக முக்கியம். இதன்கட்டணம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இதை மேலும் குறைக்க வேண்டியது அவசியம். செல்போன் கட்டணங்கள்குறைந்தததால் தான் அத்துறை அமோக வளர்ச்சி அடைந்துள்ளது. இதை இன்டர்நெட் சேவையிலும் செய்ய வேண்டும்.
சொந்த மொழியில் இன்டர்நெட் பயனபடுத்துவதையே பலரும் விரும்புகின்றனர். இந்திய மொழிகள், தமிழ், இந்தி மற்றும் பிறமொழிகளில் சர்வதேச இணைய தள முகவரிகளை அறிமுகம் செய்ய உள்ளோம். ஏற்கனவே பிரந்திய மொழிகளில்மென்பொருள்களை இலவசமாக அளித்துள்ளோம். அதில் மேலும் பல வசதிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications