பாபா பங்கேற்கும் மகா யாகம் நாளை துவக்கம்
சென்னை:சாய் பாபா பங்கேற்கும் அதிருத்ர மகா யாகம் நாளை சென்னையில் துவங்குகிறது. உலகில் அமைதிக்காக இந்தயாகம் நடக்கிறது.
ஸ்ரீ சத்ய சாய் இளைஞர்கள் அமைப்பினர் நடத்தும் இந்த யாகம் சென்னை திருவான்மியூரில் நடக்கிறது. நாளைதொடங்கி 11 நாட்கள் நடக்கவுள்ள இந்த யாகத்தில் 11 ஹோம குண்டங்கள் வளர்க்கப்பட்டு, 132 வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதவுள்ளனர்.
சென்னைக்கு கிருஷ்ண நதி நீர் கொண்டு வர உதவியதற்காக வரும் 21ம் தேதி சாய் பாபாவுக்கு பாராட்டு விழாநடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றவுள்ளார். இந் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சாய் பாபா யாகத்திலும்பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார்.
11 நாட்களுக்கு மாலை நேரங்களில் சத்ய சாய் நிறுவனங்களின் பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் இசை, நாட்டியநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
நாளை தொடங்கும் இந்த யாகம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும்,பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் நடைபெறும்.அதிருத்ரயக்னம், அதிருத்ர அபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.
10 வருடங்களுக்குப் பிறகு சாய் பாபா இப்போது தான் சென்னை வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications