ரோஷம் இல்லாத காங்கிரஸ்: செங்கோட்டையன்
திருவண்ணாமலை:தமிழக காங்கிரஸாருக்கு ரோஷமே இல்லை. இருந்திருந்தால் திமுக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்பதவிகளையாவவது வாங்கியிருப்பார்கள் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலையச்செயலாளருமா கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு செங்கோட்டையன்பேசுகையில், தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் ஜெயலலிதாதான் பட்ஜெட் படிப்பார். ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலப்பட்டுவிட்டது. அதற்கான வியூகத்தை ஜெயலலிதா வகுத்து விட்டார். ஏப்ரலுக்குள் கருணாநிதி ஆட்சி முடிந்து விடும்.
தமிழகத்தில் தனி மனித சுதந்திரம் இந்த ஆட்சியில் பறிபோயுள்ளது. அதைக் காக்க வேண்டும் என்றால்ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.
சிறுபான்மை திமுக அரசை காங்கிரஸ்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி,திமுக அமைச்சரவையில் 5 அமைச்சர் பதவிகளைக் கூட கேட்டு வாங்க முடியவில்லை. காங்கிரஸாருக்குரோஷமே இல்லை.
இப்படி இருந்தால் எப்படி அவர்கள் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும் என்றார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications