சென்னை-மதுரை: நாளை சிறப்பு ரயில்
சென்னை:சென்னையிலிருந்து மதுரைக்கு நாளை (20ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
பொங்கல் விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், சென்னையில்வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஊர்களுக்குத் திரும்பியவண்ணம் உள்ளனர்.
இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மதுரைக்கு நாளை சிறப்பு ரயில் ஒன்றுசென்னையிலிருந்து இயக்கப்படுகிறது.
நாளை இரவு 11 மணிக்கு இந்த சிறப்பு ரயில் எழும்பூ>லிருந்து கிளம்பும். மறுநாள் காலை 9 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடுஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதற்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வழக்கம் போல சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள்விற்றுத் தீர்ந்தன. எல்லாம் புரோக்கர்கள் புண்ணியம் தான்...












Click it and Unblock the Notifications