கல்லூரிக்குள் தாறுமாறாக ஓடிய பஸ்-மாணவி பலி
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே கல்லூரி வளாகத்திற்குள் கல்லூரிப் பேருந்து தாறுமாறாகஓடியதில் மாணவி ஒருவர் பலியானார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் மகளிர்கல்லூரியில், நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவிகளை ஏற்றிக் கொண்டுகல்லூரிப் பேருந்து கிளம்பியது.
டிரைவர் பெரியசாமி பேருந்தை உள்ளிருந்து வெளியே ஓட்டிக் கொண்டு வந்தார்.அப்போது திடீரென டிரைவர் பெரியசாமி மயக்கமடைந்து அப்படியே இருக்கையில்சாய்ந்தார். இதனால் பேருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
இதனால் பேருந்தில் இருந்த மாணவிகள் பீதியடைந்து அலறினர். அதேசமயம்,தாறுமாறாக வந்த பேருந்தைப் பார்த்து கல்லூரி வளாகத்தில் இருந்த மாணவிகளும்பதறியடித்து அங்கும் இங்குமாக ஓடினர்.
இந்த நிலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து கேண்டீன் இருந்த பகுதிக்கு வந்தது.பேருந்தைப் பார்த்த மாணவிகள் அங்கிருந்து ஓடினர். அப்போது சந்தியா என்ற 19வயது மாணவி பேருந்தில் சிக்கிக் கொண்டார். சக்கரம் ஏறி அதே இடத்தில் அவர்பரிதாபமாக பலியானார்.
மேலும், உஷாராணி, பத்மாவதி, ரேவதி ஆகிய 3 மாணவிகள் காயமடைந்தனர்.அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications