மாநகராட்சி மறு தேர்தல்-ஆணையர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாகமாநகராட்சி ஆணையருடன் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் இன்று முக்கியஆலோசனை நடத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து திமுக கூட்டணியைச் சேர்ந்த 97கவுன்சிலர்களும் ராஜினாமா செய்தனர்.

மேயர் மா.சுப்பிரமணியனும் ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதம்மாமன்றக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்காக நேற்றுஅவசரக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கூட்டத்தைக் கூட்ட கோரம் இல்லாததால் திடீரென கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.

இதன் காரணமாக மேயரைத் தவிர மற்ற 97 கவுன்சிலர்களின் பதவிகளும்காலியாகியுள்ளன. இதுதவிர அதிமுக உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே ராஜினாமாசெய்துள்ளதால் அந்த இடங்களும் காலியாக உள்ளன.

இந்த 100 இடங்களுக்கும் மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தேர்தல்ஆணையர் சந்திரசேகரன், இன்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியுடன்ஆலோசனை நடத்தினார்.

மறு தேர்தலிலும் வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு முறை பயன்படுத்தப் படாது என்று ஏற்கனவே சந்திரசேகரன் கூறியுள்ளதுநினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+