அவதூறு: ஜெ நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் பிப்ரவரி 26ம் தேதி நேரில்ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குசென்னை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு தொடர்பாக ஜெயலலிதாவெளியிட்டிருந்த அறிக்கையில், கருணாநிதிதான் சிலை திறப்புக்குமுட்டுக்கட்டையாக இருந்தார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறானதகவலை வெளியிட்டதாக கூறி சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்ஷாஜகான், ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 26ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறுகூறி ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications