ரியாத்: ஓடும் பஸ்ஸில் இந்தியர் தற்கொலை
ரியாத்:செளதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த இந்தியர், மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் விரக்தியுற்றுபாட்டிலால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் உள்ளிட்ட விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ரியாத் நகரிலிருந்து அவர் பேருந்தில்பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கையில் இருந்த பாட்டிலை உடைத்து தனது உடலில்சரமாரியாக குத்திக் கொண்டார்.
இந்த சம்பவத்தைப் பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டுநர் நேராக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு பேருந்தை செலுத்தினார். அங்கு போலீஸாரிடம் புகார் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு அந்தநபரை கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் தன்னைத் தானே பாட்டிலால் குத்திக் கொள்வதற்கு முன்பு அவரது மனைவி இந்தியாவிலிருந்து பலமுறைஇவருடன் செல்போனில் பேசியுள்ளார். தொடர்ந்து போன் கால்கள் வந்த பின்னரே அவர் பாட்டிலால் குத்திக்கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட அந்த இந்தியருக்கு 30 வயது இருக்கும்.
2006ல் கத்தாரில் 182 இந்தியர்கள் மரணம்:
கத்தார் தலைநகர் தோஹா சிறையில் 10 பெண்கள் உள்பட 29 இந்தியர்கள் வாடி வருகின்றனர். இவர்களில் 2பேர் கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மேல் முறையீட்டு மனுவிசாரணையில் உள்ளது.
இவர்களில் தேவசு ஜோனியாபென், பிலகல், யானா ராஜன், நிதான், சமய் கண்ணன், ஜூபைர் பதிசெர்ரி, சையத்ஆசிம் அப்சல், பக்தி சஞ்சீவ் ஆகிய 8 கைதிகளுக்கு ரம்ஜான் மாதத்தையொட்டி கத்தார் அதிபர் ஷேக் ஹமத்பொது மன்னிப்பு வழங்கினார். இருப்பினும் அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
இவர்களைப் போல மேலும் 146 இந்தியர்கள் கத்தார் நாட்டின் பல்வேறு இடங்களில் அதிகாரிகளால் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களைஇந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கடந்த ஆண்டு கத்தார் நாட்டில் 182 இந்தியர்கள் இறந்துள்ளதாக இந்தியத் தூதரகம்தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications