பேட்டரி காரில் கருணாநிதி-பகவத்கீதை பரிசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை முதல்வர் கருணாநிதி பேட்டரி காரில் அமர்ந்தபடிபார்வையிட்டார்.

தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பச்சையப்பன் கல்லூரிமைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 30வது ஆண்டாக நடந்து வரும் இந்தக் கண்காட்சியில் 5கோடி புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 10ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்ததோடுபதிப்பாளர்கள், எழுத்தாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி நிதியையும் வழங்கினார்.

இந் நிலையில் நேற்று அவர் புத்தக கண்காட்சிக்கு திடீரென அவர் வந்தார். கண்காட்சி நடப்பது மிகப் பெரியமைதானம் என்பதால் பேட்டரி காரில் அமர்ந்தபடி கண்காட்சியை அவர் சுற்றிப் பார்த்தார்.

கண்காட்சியின் முதல் அரங்காக இடம் பெற்றுள்ள கலைஞர் அறிவுக் கூடத்தில் நுழைந்த அவர் அங்குவைக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

கருணாநிதி சிறு வயதிலிருந்து எழுதிய நூல்கள் அத்தனையும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. கட்டுரை, கவிதை,உரைநடை, நாடகம் என பல தரப்பிலான பொருட்களில் கருணாநிதி எழுதியிருந்த நூல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதவிர பிற தலைவர்களுடன் கருணாநிதி இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.இவற்றைப் பார்வையிட்ட கருணாநிதி மலரும் நினைவுகளில் மீழ்கி அந்த நினைவுகளை தன்னுடன்வந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

1963ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அண்ணா எம்.பியாக இருந்தபோது டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு எழுதியகடிதமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள. அந்த கடிதத்தை கருணாநிதி நிதானமாக முழுவதுமாக படித்துப்பார்த்தார்.

1942ம் ஆண்டு திருவாரூர் கிருஷ்ணா அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல் முரசொலி இதழின் பிரதியைப் பார்த்தார்கருணாநிதி. அப்போது கருணாநிதியுடன் வந்திருந்த வைரமுத்து அதில் முதலில் இருந்த இரண்டு வரிகளைப்படித்தார். பின்னர் மற்ற வ>களை கருணாநிதி அப்படியே சொல்ல ஆரம்பிக்க, அவரது நினைவாற்றலைப் பார்த்துஅருகில் இருந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

பின்னர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றி பிற தலைவர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள்குறும்படமாக தயாரிக்கப்ப்டிருந்தது. அந்தப் படத்தை அவர் அமர்ந்து பார்த்தார்.

பின்னர் பேட்டரி காரில் அமர்ந்தபடி ஒவ்வொரு அரங்கமாக சென்று என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதைகேட்டறிந்தார். பல அரங்கங்களில் கருணாநிதிக்கு பல நூல்களை பரிசாக வழங்கினர். பகவத் கீதையும் பரிசாகஅளிக்கப்பட்டது.

கருணாநிதியுடன் அமைச்சர் துரைமுருகன், திரைப்படத் தயா>ப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், கவியரசுகண்ணதாசனின் மகனும், புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத் தலைவருமான காந்தி கண்ணதாசன்ஆகியோரும் உடன் சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் புத்தகக் கடலில் மூழ்கி முத்துக்குளித்த கருணாநிதியைப் பார்த்து புத்தக் கண்காட்சிக்குவந்திருந்த பலரும், இருக்கு வயசு நிஜமாவே 84 தானா என்று சந்தேகப்பட்டதை பார்க்க முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+