ராணுவத்துடன் புலிகள் தொடர்ந்து மோதல்

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி:வாகரை சண்டையில் இழப்பை சந்தித்திருந்தாலும் தொடர்ந்து ராணுவத்தை எதிர்த்துதீரமுடன் எமது வீரர்கள் போ>ட்டு வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் இயக்கசெய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறியுள்ளார்.

இலங்கையின் கிழக்கில் உள்ள முக்கிய கடலோர நகரான வாகரையை பிடித்துள்ளதாகஇலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த நகரம்விடுதலைப் புலிகள் வசம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வாகரையில் பெரும் இழப்புகளை சந்தித்திருந்தாலும் கூட போரிடும்பலம் இன்னும் குறையவில்லை, தொடர்ந்து ராணுவத்தை எதிர்த்து கடுமையாகபோ>ட்டு வருவதாக புலிகள் தெரிவித்தள்ளனர்.

இதுகுறித்து புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன்கிளிநொச்சியில் கூறுகையில், எங்களது போர்க்களம் மாறியிருக்கலாம். ஆனால் போர்வேகம் குறையவில்லை. தொடர்ந்து போ>ட்டு வருகிறோம்.

திரிகோணமலையில் நாங்கள் இன்னும் பலவீனப்பட்டு விடவில்லை என்றார் அவர்.வாகரையை ராணுவம் கைப்பற்றி விட்டாலும் கூட இன்னும் பல கிலோமீட்டர்தொலைவுக்கு ராணுவம் உள்ளே வர வேண்டியுள்ளது. அங்கெல்லாம் விடுதலைப்புலிகள் தொடர்ந்து கடுமையாக மோதி வருவதாக கூறப்படுகிறது.

வாகரை சண்டை காரணமாக தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்துதப்பி தெற்கு நோக்கி நகர்ந்து வருகின்றனர். காடுகள் வழியாகவும், ஆறுகள்வழியாகவும் அவர்கள் மிகுந்த சிரமத்துடன் மட்டக்களப்பில் உள்ள மீட்புமுகாம்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.

பள்ளிகளில் இவர்கள் தங்க தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை25,000 மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+