தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர்-பாட்டீல்
சென்னை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில், சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் திட்டப் பணிகள்குறித்து அதிகாரிகளுடன் பாட்டீல் ஆய்வு நடத்தினார். இதில் மத்திய இணையமைச்சர்ரகுபதி, மாநில அமைச்சர் திண்டுக்கல் ஐ பெ>யசாமி, தலைமைச் செயலாளர் திரிபாதிமற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பாட்டீல்,செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியும்,முதல்வருமான கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினோம். அவரது தலைமையில்தமிழகத்தில் நல்லாட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும்முன்னோடியாக, அனைத்து மாநிலங்களும் பாராட்டும்படியாக கருணாநிதியின்செயல்பாடுகள் உள்ளன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இதன் காரணமாக பொருளாதாரமுன்னேற்றம் அபரிமிதமாக உள்ளது.
தமிழகக்தில் சுனாமி நிவாரணப் பணிகள் சிறப்பாகவே நடந்து வருகின்றன. இதில்எனக்கு முழு திருப்தி. அதிகாரிகளிடம் பேசியபோது சுனாமி நிவாரணப் பணிகள்வேகமாக நடப்பதை அறிந்து கொண்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications