அவதூறு வழக்கு-நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
சென்னை:திமுக பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று எழும்பூர்தலைமைப் பெருநகர நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜரானார்.
மதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை விமர்சித்து வைகோ பேட்டி அளித்திருந்தார். இதையடுத்துதமிழக அரசின் சார்பில் வைகோ மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் சமீபத்தில் வைகோ நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல திமுக சார்பில் எழும்பூர் தலைமைப்பெருநகர நீதிமன்றத்தில் வைகோ மீது ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கிலும் வைகோ நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வைகோ இன்று நேரில் ஆஜராகி விளக்கம்அளித்தார்.
அதன் பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு சென்னைமாநகராட்சித் தேர்தலில் வன்முறையை நடத்தி முடித்துள்ளனர். அதற்கு போலீஸையும் பயன்படுத்தியுள்ளனர்.
அதனால்தான் டிஜிபி, மாநகர காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றுகோருகிறோம். அவர்களை டிரான்ஸ்பர் செய்யக் கூடாது. மாறாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இதற்குப் பொறுப்பேற்று கருணாநிதியும், ஸ்டாலினும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications