வளைகுடா-அதிகரிக்கும் இந்தியர்கள் தற்கொலை
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் இந்தியர்கள் அதிக அளவில் தற்கொலைசெய்து கொள்வது இந்திய தூதரகத்திற்கும், அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21 நாட்களில் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3 இந்தியர்கள் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒரு இந்தியர் பஹ்ரைனில் உள்ள வர்த்தகவளாகம் ஒன்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முதல் நாள்தான் ஒரு இந்தியர் பாலத்திலிருந்து கீழே குதித்துத் தற்கொலைசெய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவ> 3ம் தேதி அசோக் குமார் என்ற இந்தியர் பஹ்ரைனில் உள்ள ஹூராஅபார்ட்மென்ட்டில் உள்ல தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நிதி ஆலோசகராக அவர் வேலை பார்த்து வந்தார். திருமணமானஅவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களிடையே நிலவும் மன அழுத்தம், ஊர்சோகம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனை பெறும் வகையில் 72 பயிற்சி பெற்ற மனநல ஆலோசர்களை கடந்த நவம்பர் மாதம் தான் இந்திய தூதரகம் அறிவித்தது.
இந் நிலையில் தொடர்ந்து இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது தூதரகஅதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications