கடன் அல்லது கிட்னி: மிரட்டும் முதலாளி!
ஈரோடு:ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒருதொழிலாளியிடம் அவரது சிறுநீரகத்தைக் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் மீதுபுகார் கூறப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அருகே உள்ள ஆலத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்பார்த்திபன். இவரது மனைவி லோகநாயகி. இவர்களுக்கு சந்தியா, விக்னேஷ் ஆகியகுழந்கைள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனைச் சந்தித்த பார்த்திபன் ஒரு புகார் மனுவைக்கொடுத்தார். அதில், நானும், எனது மனைவியும் மொடக்குறிச்சியில் உள்ள ஜவுளிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தோம். நிறுவன உரிமையாள>டம் குடும்பத்தேவைக்காக ரூ. 45,000 கடன் வாங்கியிருந்தோம்.
பணத்தை உரிய நேரத்தில் திருப்பித் தர முடியவில்லை. இருவருக்கும் சேர்த்து மாதஊதியம் 600 ரூபாய் மட்டும்தான். இதைக் கூறி கடனைக் கட்ட கால அவகாசம்கேட்டோம்.
அதற்கு அவர் பணத்தை உடனடியாகக் கொடு அல்லது உனது சிறுநீகரத்தைவிற்றாவது பணத்தைக் கொடு என்று மிரட்டுகிறார்.
இதனால் பயந்து போன நான் டிசம்பர் 31ம் தேதி இரவு வீட்டைக் காலி செய்த விட்டுதிருச்செங்கோடு போய் விட்டேன். அப்படியும் நான்கு பேர் கொண்ட கும்பல் எனதுவீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றது.
இதனால் எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்பார்த்திபன். இந்த புகார் குறித்து ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் விசாரிக்கஉத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications