சென்னை - கோவைக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:சென்னையிலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குடியரசு தினம் மற்றும் முகரம் பண்டிகையையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதையடுத்துசென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்குவதாக அறிவித்துள்ளது.
இதேபோல கோவைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:
சென்னையிலிருந்து 24, 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் இரவு 10.20 க்கு புறப்படும் சிறப்பு ரயில்கள்கோயம்பத்தூருக்கு மறு நாள் காலை 7.15 க்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் 25, 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் இரவு 11.45 க்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8.30 க்குசென்னை சென்டரல் நிலையத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு 23ம் தேதி முதல் (இன்று) தொடங்குவதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications