கைதி வீட்டில் குண்டு வெடித்து தாய் கை துண்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுவெடித்துச் சிதறியது. இதில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியின்தாயார் படுகாயம் அடைந்தார்.
![]() |
மதுரை மத்திய தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின்போது வெடிகுண்டு வீச சதித்திட்டம் தீட்டியதாக கூறி சென்னையைச் சேர்ந்த சையத் மஸ்தான் என்பவரை போலீஸார்கைது செய்தனர்.
![]() |
இந்த நிலையில், மஸ்தானின் கோடம்பாக்கம் வீட்டில் இன்று அதிகாலை பலத்தசப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் அவரது தாயார் பீமா ஜானின் இடது கைதுண்டானது. அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு மஸ்தானை மதுரை சிறைக்குச் சென்று பீமா ஜான்பார்த்துள்ளார். அப்போது வீட்டில் பதுக்கி வைத்துள்ள வெடிகுண்டை வெளியே வீசிஎறிந்து விடுமாறு மஸ்தான் கூறியதாகத் தெரிகிறது.
அந்த குண்டை பீவி அப்புறப்படுத்த முயன்றபோது அது வெடித்துள்ளது.
அதிகாலையில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications