திருடப்பட்ட கிட்னி பொறுத்தப்பட்ட நடிகர்-நடிகை
மதுரை:சென்னை பெண்களிடம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் சில நடிகர், நடிகைகளுக்கும்பொருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை எண்ணூ>ல் உள்ள சுனாமி தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களின் அறியாமை மற்றும்ஏழ்மையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களை பெற்று அதிக விலைக்கு விற்றுகொள்ளை லாபம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
இது குறித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கொடுத்த புகாரை வைத்து சிபிசிஐடிபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் 4 மருத்துவமனைகளில் வைத்துத் தான் இந்த சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு, பிறருக்குபொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிபிசிஐடி குழு மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் மதுரை காவல்துறை ஆணையர் சிதம்பரச்சாமி தலைமையில் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுவிசாரணை நடந்து வருகிறது.
இந்த நான்கு தனியார் மருத்துவமனைகளிலும் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை, யார் யாருக்கு அது பொருத்தப்பட்டது, யார் தானம் செய்தது என்பது உள்ளிட்ட பட்டியலை போலீஸார்தயாரித்துள்ளனர்.
![]() |
இந் நிலையில் சிபிசிஐடி போலீஸ் வசம் சிக்கியுள்ள புரோக்கர் ராஜு மற்றும் சுப்பையா ஆகியோரிடம் தொடர்ந்துதீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 6 வருடங்களாக சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். 30க்கும்மேற்பட்ட பெண்களிடம் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களைப் பெற்று அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தங்களிடம் கிட்னி வாங்கி பொறுத்திக் கொண்டவர்களில் 3 நடிகர்,நடிகைகளும் அடக்கம் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். இதற்காக 3 பேரிடமிருந்தும் ரூ. 10 லட்சம் பணம்பெறப்பட்டதாம்.
ஆனால், சிறுநீரகங்களை தானம் செய்தவர்களுக்கு வெறும் ரூ. 40,000 மட்டும் கொடுத்துள்ளனர். மற்ற பணத்தைடாக்டர்களும், புரோக்கர்களும் பங்கு போட்டுள்ளனர்.














Click it and Unblock the Notifications