103 பயணிகளுடன் சூடான் விமானம் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

நஜாமெனா:103 பயணிகளுடன் சூடான் நாட்டு விமானம் கடத்தப்பட்டது. விமானம் சாட் நாட்டின் தலைநகர் நஜாமெனாவில்தரையிறங்கியது. விமானத்தை கடத்தியவர் அங்கு சரணடைந்தார்.

இன்று காலை சூடானின் கார்டோம் நகரில் அல்-பஸர் நகருக்குக்கு ஏர் வெஸ்ட் நிறுவன போயிங் 737 விமானம்சென்று கொண்டிருந்தது. அப்போது காக் பிட்டுக்குள் நுழைந்த சைப் ஒமர் என்ற நபர் விமானியின் தலையில்துப்பாக்கியை வைத்தார்.

விமானத்தை அண்டை நாடான சாட் நாட்டுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். இதையடுத்து விமானத்தை சாட்நாட்டின் நஜாமெனா நகருக்கு விமானி திருப்பினார்.

அங்கு விமானத்தை தரையிறக்க கடத்தல்காரன் அனுமதி தந்தான். இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு இடையேவிமானம் அங்கு தரையிறங்கியது. இதையடுத்து சைப் ஒமர் கைது செய்யப்பட்டான். ஒமர் பிரான்சில்தஞ்சமடைய அனுமதி கேட்டதாகத் தெரிகிறது.

சாட், சூடானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் அரசுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்து வருவதுகுறிப்பிடத்தக்கது.

சூடானின் ஏர் வெஸ்ட் நிறுவன விமானங்கள் விபத்துகளுக்கு பேர் போனவை. இதனால் இந்த விமானங்கள்தரையிறங்க ஐரோப்பிய நாடுகளில் தடையுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானம் சென்று கொண்டிருந்த அல்-பஸர் நகரம் சூடான் எல்லையான டார்பர் பகுதியில் உள்ளது. உள் நாட்டுபோரால் பாதிக்கப்பட்ட பல லட்சம் சூடான், சாட் நாட்டினர் இங்கு அகதிகளாக குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவுக்கும், குடிநீருக்கும், தங்கும் இடத்துக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது இந்த டார்பர் பகுதியில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+