மச்சினி காதல்-மகன்களை கொன்று தற்கொலை
சென்னை:மனைவியின் தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மகன்களுக்குவிஷம் கொடுத்துக் கொன் கணவன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அவர்களுடன் சேர்ந்து விஷம் சாப்பிட்ட மைத்துனி உயிர் பிழைத்துக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை அடுத்த சின்னநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 29).இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்திருமணமானது.
இவர்களுக்கு கார்த்திக் (5), அருண்குமார் (2) என இரு மகன்கள். சசிகலாவின் தங்கை சரிதா (வயது 19).அடிக்கடி அக்கா வீட்டுக்கு வருவாராம். அப்போது மாமா சந்திரசேகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இது சசிகலாவுக்குத் தெரிய வர பஞ்சாயத்துக் கூட்டினார் சசிசகலா.இதனால் அவமானம் அடைந்த சந்திரசேகர் பாலில் விஷம் கலந்து சரிதா மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.
மயங்கிக் கிடந்த நான்கு பேரையும் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சந்திரசேகரும், அவரது இரு மகன்களும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். சரிதா தீவிர சிகிச்சைக்குப் பின்னர்உயிர் பிழைத்துக் கொண்டார். இதையடுத்து உறவினர்கள் 3 பே>ன் உடல்களையும் யாருக்கும் தெரியாமல்எரித்துள்ளனர்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி எட்டியப்பனுக்கு விஷயம் லேட்டாக தெரிய வரவே அவர் போலீஸுக்குத்தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது தான் இந்தவிவரங்கள் வெளியில் வந்தன.
மருத்துவனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த சரிதா தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications